
இளவயதில் சிறகுகள் வெட்டப்படா 
இளங்கிளியாய் விண்ணில் 
சுற்றித் திரிந்தேன்...!
பச்சிளங்குழந்தையில் 
பால்குடிக்கும்போது 
அம்மாவின் அரவணைப்பு...!
தினம்தேடி நிதம் பால்சோறு 
தின்கையில் இரவல்நிலாவின் 
இதமான அரவணைப்பு ...!
பள்ளிப்பருவத்தில் பால்ய 
சிநேகிதர்களுடன் பகட்டாய் 
விளையாட்டு....!
கல்லூரியில் கலாட்டா
நண்பர்களின் காற்றோட்டம் ..
காற்றில் பறந்தபடியே 
காதலில் மிதந்தேன்...!
கல்லூரி முடிந்ததும் கற்பனை 
வாழ்வை மெச்சிய என் கால்கள்,
பணியில் பாய்ந்ததும் ,
சொந்தக்கால்களில் நிற்கத் துடித்தன.....
ஆறுமாதம் கழிந்ததும் என் காதல் 
செழிந்ததும் வியப்பின் விட்டம்....!
ஊதியம் ஒருநாளும் சென்றதில்லை 
என் அம்மாவின் கைகளில்...
ஊதியப் பாதி என் அலங்காரமும்,
மீதி அவனின் சிங்காரமுமென 
சிதைந்தது...
காலம் கடந்த என் காதல் 
கற்பை இழந்துவிட்டு 
நிற்கதியாய் நின்றது 
அவனிடத்தில்.....
வழித்தீர வருவான் என்றெண்ணிக் 
காத்துக் கிடந்த என் கண்கள் 
கண்ணீர்க் குளமாகிற்று.... 
மாதம் கடந்ததும் கால்கள் இரண்டும் 
திசையற்றுத் தடுமாறின,
எனக்குள் இன்னொரு பாரம் தாங்காமல்.....
அழுத என்னை ஆத்திரத்தில்
எழுந்த அன்னை அடித்தே விட்டார்....
என்ன செய்வது???? 
அப்போதுகூட அம்மா .... என்று தான் 
அழுதேன்!
என்னிருபது வயதில்தான்
மூளைக்குள் பறந்தது பட்டாம்பூச்சி ,
"பெற்றோர்கள் பிடற்றுவதைக் 
கேட்டிருக்கலாமே " என்று....! 
5 கருத்துகள்:
உங்களை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்
http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_19.html
good one
அருமை.
வாழ்த்துககளுடன்...
வலைப்பூக்களில்
சாதனை படையுங்கள்
வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
கருத்துரையிடுக