புதன், 9 பிப்ரவரி, 2011

பிரிவோம்! சந்திப்போம்!


மேற்கு வானம் சிவந்து
கடலிடம் கசிந்துருகுவதுபோல்
நானும் உருகிக் கரைகிறேன்
உன் அன்பில் மொத்தமாக.....

நிழல்கள் இரண்டும் கூடி
நிஜமொன்றாய் ஆவது,
நீயின்றித் தவிக்கும் என்னை
இருகூறாய்ப் பிளப்பதற்கே !

கடல் நீரில் உப்பைப் பிரித்தெடுக்கும்
சோதனையே உன்னை என்னிடம்
பிரித்தெடுக்கும் முயற்சி!

ததும்பிய நீர் தரையில்
பட்டோடி விரும்பிய வண்ணஞ்
செல்லும் ...
விதும்பிய என் நெஞ்சம்
விலாசமில்லாமல் உன் அன்பைத்
தேடி ஆற்றுப்படும் !

இடைவெளிகள் எல்லாம் இம்சைகளாய்
பிரியும் தருணமனைத்தும்
பிய்ந்து போன என் அன்புமட்டும்
விரியும் தருணமாகவே
விஸ்தரித்துக் கொண்டிருக்கின்றது ....

நாளை அழிந்தழுகும் இந்த
உடலுக்கு மட்டுமே
பிரிவுப் பாலம் கட்டமுடியும்!
மதகுடைத்துக் கொண்டுவரும்
காதலுக்குப் பெருங் காற்றும்
கனலும் என்ன செய்துவிடும் ?

மறையும் சூரியனின் பிரியும்
இதயம் , நாளை
மீண்டும் உதயமாவதற்கே !
விதிவழி வந்த நம் இன்றைய பிரிவு
சதியுடைத்துச் சந்திக்கும் நம்
நாளைய பொழுதிற்க்காகவே!

3 கருத்துகள்:

அன்புடன் நான் சொன்னது…

காதல்... மிக அழகா வந்திருக்கு, பாராட்டுக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

இடைவெளிகள் எல்லாம் இம்சைகளாய்
பிரியும் தருணமனைத்தும்
பிய்ந்து போன என் அன்புமட்டும்
விரியும் தருணமாகவே
விஸ்தரித்துக் கொண்டிருக்கின்றது ....//

வரிகள் மிக நல்லாயிருக்கு.

திருமதி.வனிதா வடிவேலன். சொன்னது…

nandri nanbare !