வியாழன், 24 மார்ச், 2011

விடுமுறைக் காதல்...!


கள்ளிச் செடிகளும்
முளைக்கத்தயங்கும்
களர்நிலமான என் இதயம்
நீ கால் பதித்துச் சென்றதும்
பூப்பூக்க ஆரம்பித்துவிட்டது...!

உன் கல்லூரி விடுமுறைக்காலம்
என் வாழ்வின் வசந்த காலம்...!
வறண்ட என் பாதையில்
நிதம் தண்ணீர் தெளித்துக்
கோலமிட்டாய்....!

உன் விழிகளின் ஓரப்பார்வையோ
என் இரவுகளின் விடியல்களாக
வியாபித்துக் கொண்டிருக்கின்றது...!

விதியின் விளையாட்டால்
என் இதயத்தின் எமனாக
எதிர்வீட்டிலேயே
குடிவந்திட்டாய்...!

முதல் பார்வையிலேயே என்னை
மொத்தமாய் சில்லுடைத்துச்
சிதறச் செய்தாய்...!

உன் பார்வையில் பந்தாகிப்போன
என் இதயம் ,
முட்டிமோதி காற்றிறங்கி
காத்திருந்தது உன் காதலுக்காக...!

இரண்டே நாளில்
மௌன மொழிபேசிய உன் கண்கள்,
ஏனோ தெரியவில்லை
இதழ்ப் பூட்டைமட்டும்
திறந்திட மறுத்தது...!

எத்தனை நாட்கள்தான்
சொல்லாத காதலைச் சுமந்து
கொண்டு திரிவது...?

என் இதயம் உனக்கல்லாது
வேறுயாருக்காவது
நிச்சயிக்கப் பட்டிருக்குமோ
என்ற ஐயத்தில் நின்ற என்னை..,

நிஜத்தில் இழுத்து நெஞ்சைக் கிழித்து
இதயத்தைப் பெயர்த்துக் கையோடு
கொணர்ந்து சென்றாய்...உன் ஊருக்கு...!

உண்மை விளங்கவே
ஒருவார காலம் பிடித்த என்
நெஞ்சம் ஊமையாகிக்
காத்திருந்தது....

உன் அடுத்த விடுமுறைக்காக...!

8 கருத்துகள்:

Learn சொன்னது…

உண்மை விளங்கவே
ஒருவார காலம் பிடித்த என்
நெஞ்சம் ஊமையாகிக்
காத்திருந்தது....

உன் அடுத்த விடுமுறைக்காக...!


அருமை தோழி பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அழகான காதல்.!

ரொம்ப நல்லாருக்கு..!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>என் இதயம் உனக்கல்லாது
வேறுயாருக்காவது
நிச்சயிக்கப் பட்டிருக்குமோ

காதல் சொட்டுது.... மனதை வாட்டுது..கலக்கல்

நசரேயன் சொன்னது…

//ஏனோ தெரியவில்லை
இதழ்ப் பூட்டைமட்டும்
திறந்திட மறுத்தது...!//

சுத்தி வச்சி உடைக்கணும்

சிந்தையின் சிதறல்கள் சொன்னது…

அருமையான வரிகள் வாழ்த்துகள்

நிரூபன் சொன்னது…

கள்ளிச் செடிகளும்
முளைக்கத்தயங்கும்
களர்நிலமான என் இதயம்
நீ கால் பதித்துச் சென்றதும்
பூப்பூக்க ஆரம்பித்துவிட்டது...!//

வணக்கம் சகோதரம்,
முதன் முதலாக உங்கள் வலைப் பதிவினைப் படிக்க வந்திருக்கிறேன்.

காதலனின் கடைக் கண் பார்வை கிடைக்கும் வரை பெண்ணின் உள்ளம் கல்லினைப் போல வைரமானது என்பதனை முதல் பந்தியில் சுட்டியுள்ளீர்கள்.

நிரூபன் சொன்னது…

உன் கல்லூரி விடுமுறைக்காலம்
என் வாழ்வின் வசந்த காலம்...!
வறண்ட என் பாதையில்
நிதம் தண்ணீர் தெளித்துக்
கோலமிட்டாய்....!//

அருமையான அணி..
வறண்ட என் பாதையில் நிதம் தண்ணீர் தெளித்துக் கோல மிடல்..//

விதியின் விளையாட்டால்
என் இதயத்தின் எமனாக
எதிர்வீட்டிலேயே
குடிவந்திட்டாய்...!//

இது தான் தேடல் என்பதோ!

//
நிஜத்தில் இழுத்து நெஞ்சைக் கிழித்து
இதயத்தைப் பெயர்த்துக் கையோடு
கொணர்ந்து சென்றாய்...உன் ஊருக்கு...!

உண்மை விளங்கவே
ஒருவார காலம் பிடித்த என்
நெஞ்சம் ஊமையாகிக்
காத்திருந்தது....

உன் அடுத்த விடுமுறைக்காக...!//

இக் கவிதையில் இரு பொருள் வருகின்றனவா என ஐயமுற்றேன். உங்கள் உள்ளத்து உணர்வுகளை கடிதமாக்கி எழுதி விட்டு, காத்திருப்பது போல எழுதுகிறீர்கள் என்று படித்து வீட்டுக் கீழே பார்க்கும் போது,
வெறும் ஒற்றை வரியில் கவிதையின் இறுதி விளக்கத்தை மாற்றியுள்ளீர்கள்.

//உன் அடுத்த விடுமுறைக்காக...

வாழ்த்துக்கள் தோழி, விடுமுறைக் காதல், பார்வைகளால் வலை வீசி விட்டு, விலகிச் சென்றவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

திருமதி.வனிதா வடிவேலன். சொன்னது…

மிக்க நன்றி தோழர்களே !