வெள்ளி, 18 நவம்பர், 2011

நாடு எங்கே போகிறது?

மனிதன்,

மதம் பிடித்து

மனம் திளைத்து

மதிமயங்கிவரும்

ஓர் மட்கும் குப்பையானவன்....!


இதில் நம் நாடு...?

பலகோடி மக்கள் சேர்ந்த

ஒருகூட்டுச் சமுதாயமாக

நிரம்பி வழியும் மதுக்கிண்ணம்...!


ஆனால் மனிதம் என்பது?

மனிதனிலும் , நாட்டிலும் ,

தேடிக்கிடைக்காத ஒரு பொக்கிஷம்...!


குப்பையிலும் மதுவிலும்

களவிலும் கொலையிலும்

பொய்யிலும் வழுவிலும்

புரண்டு அழும் ஓர்

ஊமைக்குழந்தை...!


இறைவா....

ஊமைக்குழந்தைக்கு

பேசும் வரமளித்தால்தானே

நாட்டின் காதுகள் திறக்கப்படும்?


நசுங்கிப்போன மனிதனின் ஆறாம் அறிவு,

நலிந்துகொண்டே வந்து விலங்குடன் சேர

விழைகிறது...


நாட்டைக்காக்கும் மன்னர்களும்

விதண்டாவாதத்தில் வீழ்ந்து

நாட்டைப் பணயம் வைத்துத் தம்

வீட்டைக்காக்க முற்படுகின்றனர்...


குழந்தைகளுக்கு கட்டாயம் கிடைக்கவேண்டிய

கல்வியும் இன்று அரசியலில்

ஆயுதமாகிப்போன அவலம்...!

தலைவர்களின் போட்டாபோட்டியால்

தட்டுத்தடுமாறும் பள்ளிகளின் நிலை

இன்று பரிதாபத்தின் உச்சம்...!


சமச்சீரானால் என்ன? சாதாரணமானால் என்ன ?

இது கல்விக்கும் மாணவர்களுக்கும்

இடைப்பட்ட பந்து...!

இப்பந்து அரசியலில் உதைப்பட்டுக்கொண்டிருக்கிறதே ஏன்?


நாடு நலமாகத்தான் உள்ளது....

ஆனால் ,

நாட்டிலுள்ளோர் ?

நடமாடிகொண்டிருக்கின்றனர்...


நாடு எங்கே செல்கிறது என்பதை

தெரிந்து கொள்ள.....!

1 கருத்து:

Unknown சொன்னது…

Mam this is RAAJARAAJESHWARI.J.C .All your poems are awesome and i liked it a lot,mam please continue writing poems and give us more sweet poems like this forever.Mam u r an very great poet mam.love all ur poems mam.