
கனவு,
கண்களுக்கு நிதம்
அளிக்கப்படும் ஒரு
உணவு....
மூளை மேடையில் கண்கள்
நிகழ்த்தும் ஓர் கற்பனைக்
காவியம்....
விடிந்ததும் முடிந்துவிடும்
ஒரு சரித்திர சகாப்தம்.....
கால்கள் வலிக்காமல் பயணம்,
ஒரு நொடியில் மரணம்,
சில நொடியில் வாழ்க்கை,
திரும்பிடும் பந்தம் ,
திரும்பாத சொந்தம்,
எதிர்பாராத ஏக்கம் ,
உணர்ச்சிகளுள் சிக்கித்தவிக்கும்
உண்மையிலா ஒருமாய
வாழ்வு....
சொந்த கற்பனைகள்
கலவாத காரிருள் நண்பன்!
கண்கள் திறந்ததும்
கவலையில் கண்ணீர் சிந்தும்
கற்பனைகள் மெச்சிய
வாழ்வு ! கனவு !
1 கருத்து:
கண்கள் திறந்ததும்
கவலையில் கண்ணீர் சிந்தும்
கற்பனைகள் மெச்சிய
வாழ்வு ! கனவு !
nice lines..
keep it up ur rocking work...
கருத்துரையிடுக