புதன், 12 ஜனவரி, 2011

தேர்தல் .....


தேர்தல் ,
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
அரசியல் பிழைப்போரால்
அமோகமாக நிகழ்த்தப்படும்
உரிமைத் திருவிழா ....
சாலைகள் தோறும்
ஒலிப்பெருக்கியின் ஓலங்கள்...
வீதிகள் தோறும்
வண்ணத் தோரணங்களின்
சாரங்கள்....

பொதுமக்கள் அனைவரும்
உறவினர்கள் ஆகும்
உலகச் சமாதானதினம் !

வாக்குறுதிப் பள்ளம்
வழிந்து நிரம்பும் , தலைவர்களின்
போதை மிகுதியால்.....

விழாவில் கூடும் சந்தையில்
விற்கும் பொருளாக
வாக்குச்சீட்டு .....

நாளை இறக்கும் கிழவிக்கும்
வாக்குரிமை....
வாக்குச்சாவடிவரைப் பறக்கும்
ஆட்டோக்களுக்கு அன்று
அமோக சவாரிகள்...

ம்ம்ம்...
அற்ப மானிடனுக்குத் தெரியாது
ஓட்டைப் பெற்றுக் கொண்டு
(திரு)ஓட்டைக் கொடுப்பார்களென்று !

தன் ஐந்தாண்டு ஆயுளை
வெறும் ஐந்நூற்றுக்கு விற்றுவிட்டு
அல்லல்படும் அவர்களுக்கு
தேர்தல் ஓர் திருவிழாதான்!

வாக்காளனே ! தேர்தல் ,
தோரணங்கள் கட்ட கோவில் திருவிழாவா ?
புத்தாடை அணிய பொங்கல்தீபாவளியா ?
உன் ஐந்தாண்டு ஆயுளை விற்க ,
தலைவர்கள் எமதூதர்களா ?

உன் ஆறாம் அறிவு
அனாதையாய்க் கிடக்கின்றது ....
அதற்குத் தேர்தலன்று மட்டுமாவது
ஆதரவுகொடு......!

5 கருத்துகள்:

அன்புடன் நான் சொன்னது…

நச் கருத்துங்க .... பாராட்டுக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

தேர்தல் இன்றைய நிலையை மிக சரியா சொன்னிங்க...


உங்களுக்கு எந்தினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

arasan சொன்னது…

நாளை இறக்கும் கிழவிக்கும்
வாக்குரிமை....
வாக்குச்சாவடிவரைப் பறக்கும்
ஆட்டோக்களுக்கு அன்று
அமோக சவாரிகள்...
//

சரியான சவுக்கடி... வனிதா,,,
தொடர்ந்து கலக்குங்க ....

arasan சொன்னது…

உங்களின் வரிகளில் உண்மையான சமூக அக்கறை தெரிகிறது ....
தொடர்ந்து உங்கள் படைப்புகளை படித்ததில் சொல்கிறேன் ....
உங்கள் படைப்புகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ..

திருமதி.வனிதா வடிவேலன். சொன்னது…

நன்றி மிக்க நன்றி ! உங்களின் ஊக்கமே எனது ஆக்கம்!