சனி, 12 மார்ச், 2011

மனதைத் திற....


புதியதாய் புறப்பட்ட தென்றலே
ஏன் புத்துணர்ச்சியற்று
மூலையில் முடங்கிவிட்டாய்?
பூக்களுக்குள் பூகம்பம்
நிகழ்த்த வல்லாயோ ?
மக்களுக்குள் சுவாசம்
அளிக்க வல்லாயோ ?

ம்ம்ம்... புறப்படு....!

உனக்கான பாதை
இன்று வானம்போல்
பரந்து விரிகிறது ...!
மேகத்தில் கால்பதித்து
சூரியனிடம் கைக்கோர்த்திடு...!

கவலையற்ற மனிதர்களிடம்
நட்பு கொள்ளாதே....
அவர்கள் முயற்சியற்ற மூடர்கள்...!
உன் முயற்சிக்கும் முலாம்பூசி
முற்றத்தில் முடக்கிடுவர்...!

பணம்படைத்த பரிதாபங்களுடன்
பந்தம் வைக்காதே....
அவர்கள் தேங்காயை உருட்டும்
நாயினத்தவர்....
உன்னை குறிக்கோளற்ற
கும்மிருட்டுக்குள் புகுத்திடுவர்....!

அகவையற்ற காதலில்
அடிவைத்திடாதே....
உன் கண்முன்னே ,
அற்பங்களனைத்தும்
சொற்பமாய் மின்னி
கண்ணைப் பறிக்கும்....!
அடிவைத்த பாவத்திற்கு
விலையை உன்
கற்பைக்கேட்டிடும்...!

உன் ஆடைமூடிய பாகத்தின் மேல்
அம்புவீசிடும் கண்களை அள்ளிப்
பறித்திட்டுக் குருடாக்கிடு ...
அவனின் மனையாளிடம்கூட
அவன் மோகத்தில் முயங்கக்கூடாது...!

உன் கண்களைச் சந்திக்கும்
கண்களைக்கொண்ட ஆடவர்களுடனே
நட்பு கொண்டிடு....
நேர்மையான மனிதங்களை
நிந்தித்துவிடாதே....!

பெண்களுக்குள்ளே பிரகாசமாய்
ஒளிர்ந்திடு....
அடுக்களைப் பூச்சியாய் அமர்ந்திடாதே...
அப்பாவி என்ற பட்டம்கட்டி
அணைத்திடுவர் உன் திறமைகளை...!

இப்பொழுதும் கூட உன் பாதை
விரிந்துதான் கிடக்கிறது...
சற்றே உன் மனதைத் திற....
மாற்ற வேண்டியதையெல்லாம்
மறுசுழற்சி செய்துவிடு...!

ம்ம்ம்.. புறப்படு...!!!

1 கருத்து:

ஆயிஷா சொன்னது…

கவிதை அருமை.வாழ்த்துக்கள்.