திங்கள், 21 மார்ச், 2011

இருள்...!


ஆசான்களின்
அறிவுமுன்னோடியாகி
உலகத்தின் அழகை
எதிரொலிக்கும்
கண்ணாடி-இருள்..!

நிதம் போர்நிகழும்
அந்தப் புட்கரத்தில்
பகலெல்லாம்
ஆதவரசனின் ஆட்சி....!

நேரம் நகர்கையில்
நிர்வாண மேகம்
நாணமுற்று இழுத்துப்
போர்த்தும் பட்டுக்
கம்பளம்-இருள்...!

பட்டுக்கம்பளத்தினைக் கிழித்து
பூமிக் கண்ணாடியில்
முகம் பார்க்கவரும் முழு
இரவுத் தேவதை- நிலா...!

இருட்பாதையில் இங்குமங்கும்
எரிந்து நின்று ஒளிவீசும்
நியான் விளக்குகள்
நட்சத்திரங்கள்...!

இவையனைத்திற்கும்
இடமளித்து இதயத்தைப்
பரிமளித்துக் கொண்டிருக்கும்
வானம்...!

இவற்றிற்கிடையே
இருளில் தொலைந்த
என் தூக்கம்...!

இயற்கையே ...

என் வாழ்வு ஒளிர விழைகிறேன்!
சற்றே ,
உன் இருளைக் கடன் கொடு...
சிந்தித்துவிட்டுத் தருகிறேன்...!!

2 கருத்துகள்:

arasan சொன்னது…

கடைசியில் முடித்த விதம் அருமையோ அருமை ...

மிக ரசித்தேன் தோழி ...

Learn சொன்னது…

ரொம்ப அருமையான வரிகள் தோழி

தமிழ்த்தோட்டம்