
வெற்றுக் காகிதக் கடலில்
வண்ணங்களாய் நாம்
மிதக்க, இரு இதயங்களுக்கிடையே
பகட்டாய் ஒரு படகு
காதல்!
அர்த்த ஜாமத்தில் என்
ஐம்புலன்களும் அசதியாய்த்
தூங்க, இதயம் மட்டும்
உறவாடிக் கொண்டிருக்கின்றது ,
உன் இதயத்தோடு .....
கண்கள் மூடி கவிதையை
ஆரம்பித்தால் , எழுத்துக்களனைத்தும்
பஞ்சம் பாடுகின்றன ! என்னிடம்
உன் பெயரைமட்டும் விடுத்தோடுகின்றன!
நினைவுகளுக்கும் கடிவாளமிட்டுக்
களைத்துப்போனேன் !
நீரில் கலந்த பாலைப் போல
என்னில் கலந்த உதிரமாய்
உன் நினைவுக்குதிரைகள்
ஓடிக்கொண்டிருக்கின்றன...!
என் கேள்விக்கணைகள் அனைத்தும்
உன் விடை நாணில்ஏறி வலம்வர
காலம் முழுதும் காத்திருக்கின்றன....!
நீயின்றித் தவிக்கும் எனக்கு
உன் நினைவுகளே
இளைப்பாற இடமளித்து
இதமாக இனிக்கின்றன
என் இதயத்தோடு......!
1 கருத்து:
//நீரில் கலந்த பாலைப் போல
என்னில் கலந்த உதிரமாய்//
நல்லாருக்குங்க...
கருத்துரையிடுக