வியாழன், 22 ஜூலை, 2010

தேடியும்........


நிஜங்களின் நிழல்களில்
தேடித் திரிகிறேன்,
என் நினைவில் கரைந்த
உன் நினைவுகளை......

உனக்காய் வாழ்ந்த
நினைவுகள் ஊற்றெடுத்து
ஒப்பாரி வைக்கின்றன,
என் கண்களில்....

கடல் அலைகளில்
மிதக்கும் நுரைகள்
என்னை விலக்கிதள்ளுகின்றன,
நீயின்றி தனியே சென்றதால்......

என் பூங்காக்களின் பூக்கள்
வாடி மடிகின்றன...
உன் நினைவுகளற்று
நீர்த்துளி பட்டதால்......

பிறை நிலவில் உன் முகம்
தேடித் தவிக்கிறேன்,
ஒருமுறை காட்டிவிட்டுச் செல்...

இன்றும்,
முடிவிலது தொடர்கிறது
என் பயணம்...
கிடைக்காத உன்
நினைவுகளைத் தேடி......!

கருத்துகள் இல்லை: