வெள்ளி, 23 ஜூலை, 2010

நானும்......


மலரே!
உன் முகம் காண
மலர்கிறேன்
நானும் ஓர் மலராய்,
சூரியன்....!

இருளே!
உன் அழகை
ரசிக்கிறேன் ,
மேகத்தில் மறைந்து கொண்டு
நானும் ஓர் இருளாய்,
நிலவு..!

தீக்குளிக்க முயற்சிக்கிறேன்
நெருப்பில் நின்று
நானும் ஒரு தீயாய்,
மெழுகுவர்த்தி...!

நானும் தான் நினைக்கிறேன்
உன் இதயத்தின் இசைவுகளை
புரிந்துகொள்ள...
ம்ம்ம்... இன்று வரை
எனக்கு புரியாத
புதிராய்,
நீ...!

கருத்துகள் இல்லை: