திங்கள், 22 நவம்பர், 2010

தாய்மை...


அம்மா,
அணுவைச் சிதைத்து
ஏழ்கடலைப் புகட்டிப்
பொதுவாய் நின்ற
ஓர் இன்பக்கொள்கை!
அம்மா...!

உலக வாழ்க்கைக்கு
அப்பாற்பட்ட ஓர் உண்மை
உயிர்பெற்று உலவுகிறது
இவ்வுலகில்...!

அம்மா என்ற மூன்றெழுத்து ,
மனம் என்ற மூன்றில் பிறந்து,
உயிர் என்ற மூன்றில் கலந்து,
தாய்மை என்ற மூன்றில்
முடிசூடிக்கொள்கிறது,
இவ்வுலக உறவுகளிடம்...!

ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும்
வர்ணிக்க முடியாத வார்த்தைகளால்
வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை,
அம்மா...!

ஆண்டாண்டு அழுதுபுரன்டினும்
ஆண்களுக்குக் கிட்டாத ஓர்
அரிய உணர்வு,
தாய்மை...!

4 கருத்துகள்:

VELU.G சொன்னது…

அருமையா உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கீங்க

தேவன் மாயம் சொன்னது…

அழுது புரண்டாலும் கிட்டாத உணர்வு - அசத்திட்டீங்க!

arasan சொன்னது…

உண்மைதாங்க.. வாழ்த்துக்கள்..

திருமதி.வனிதா வடிவேலன். சொன்னது…

ஆமாம் உண்மை தான் !